×

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம்

பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில், 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது என, அதிகாரிகள் தெரிவித்தனர். மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என நாளொன்றுக்கு மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி முதல் நிலையின் 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை முதல் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Vadasennai ,Thermal Power Station ,Bonneri ,Atippat ,Meenchur ,Vadasennai Thermal Power Station ,Dinakaran ,
× RELATED வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி...